Monday 30 July 2012

சிகரத்தை எட்ட சிரமப்படு..!!!


*உண்மை என்னும் பாதையில் இருந்து அணுவளவும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

* அமைதி என்னும் துறைமுகத்தை அடைவதற்கு முன் பெரும்புயல்களையும், அலைகளையும் சமாளித்துத் தான் ஆக வேண்டும்.

* கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளாமல் மனிதன் சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியாது.

* மற்றவர்களுக்கு நன்மை செய்பவன் தர்மவழியில் செல்கிறான். தீமை செய்பவன் பாவவழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதற்கான பலனை அவரவர் பெறுவது உறுதி.

* வாழ்வில் ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். லட்சியத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதற்கு மாறான எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள்.

* எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள். விடா முயற்சியுடன் போராடுங்கள். உண்மையாக உழையுங்கள். தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். லட்சியத்தை நிச்சயம் அடைந்து விடுவீர்கள்.

» விவேகானந்தர் 

1 comment:

  1. நன்று நண்பரே, நன்றாக உள்ள தங்களின் வலைப்பூ. தொடரட்டும் ..

    ReplyDelete