Monday 30 July 2012

உண்மையைப் பின்பற்றுங்கள்..!!!

*அடக்கப்படாத மனமும், தீயநெறியில் செல்லும் குணமும் நம்மை எப்போதும் கீழ்நோக்கியே இழுக்கும். ஆனால், அடங்கிய மனம் நமக்கு விடுதலை அளிக்கும்.

* உலக நன்மைக்காக உங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராய் இருங்கள்.


* கள்ளம் கபடம் இல்லாத ஒழுக்கமுள்ள நாத்திகன், வஞ்சகனைக் காட்டிலும் சிறந்தவன்.

* இதயம் பரந்து விரிந்திருந்தால் மட்டுமே ஒருவனிடம் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானத்தால் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் வந்துவிடும்.

* மனத்தூய்மை உடையவனே கடவுளுக்கு மிக நெருங்கியவன்.

* யாருடைய மனம் ஏழை மக்களுக்காகத் துன்பத்தில் வருந்துமோ, அவரே மகாத்மா.

* இந்த மண்ணில் பிறப்பு எடுத்திருக்கும் நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதாவது ஒரு நல்ல பதிவை விட்டுச்செல்லுங்கள்.

*உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதையே பின்பற்றிச் செல்லுங்கள். கபடதாரியாகவோ, கோழையாகவோ இருப்பதால் பயனில்லை.

» விவேகானந்தர் 

No comments:

Post a Comment