Wednesday 1 August 2012

அன்பு தோற்பதில்லை

சிந்தனைகள் » மகாத்மா காந்தி

* முன் நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது வைராக்கிய வாழ்வுக்கு அவசியமான பழக்கம்.

* அறிவால் கடவுளை அறிய முடியாது. ஆழ்ந்த நம்பிக்கை, அனுபவம் இரண்டும் நம்மைக் கடவுளிடம் அழைத்துச் சென்று விடும். 

* சத்தியக் கோயிலை அடைய விரும்புபவர்கள் அகிம்சை என்னும் பாதையில் நடை பயில வேண்டும்.

* நமக்கு கடவுளே மூலமாக இருக்கிறார். அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்.

* அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. பகையுணர்வோ, மனிதனை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

* கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திப்பதால், மனதை லட்சியத்தை நோக்கி குவிக்கச் செய்ய முடியும். 

* கடவுள் என்ன நோக்கத்துடன் உயிர்களைப் படைத்தார் என்பதை நம்மால் அறிய முடியாது. படைப்பின் ரகசியத்தைக் கடவுள் மட்டுமே அறிவார்.

* அகிம்சையால் வெல்ல முடியாமல் போனால், அதற்குக் காரணம் நம் மனபலவீனமே ஆகும்.

»  காந்திஜி

No comments:

Post a Comment