Monday 16 July 2012

ஒழுக்கத்தின் இலக்கணம்

 ஆன்மிக சிந்தனைகள் »விவேகானந்தர்

* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை.

*ரசாயனத்தைக் கற்பவன் இயற்கை என்னும் புத்தகத்தைப் படித்தறிவது போல, ஆன்மிகத்தைக் கற்பதற்கு படிக்க வேண்டிய நூல் மனித மனம்.

* எல்லையில்லாத சக்தி சுருள் சுருளாக இந்தச் சிறிய மனித உடலுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்தியை உணர முயல்வது தான் ஆன்மிகம்.

* சமயம் சார்ந்த தத்துவ உண்மைகளை மூளையில் ஏற்றி கொண்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். உறுதி பிறழாத ஒழுக்கமே ஆன்மிகத்தின் அடிப்படை.

* சுயநலம் ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்திற்கு கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணம்.

* மனதிற்கோ, உடலுக்கோ பலவீனத்தை உண்டாக்கும் எதையும் கைவிரலாலும் தீண்டக்கூடாது. பலமே வாழ்வு. பலவீனமே மரணம்.

* கடவுளுக்குச் சமமான ஆற்றல் சாத்தானுக்கும் உண்டு. ஆனால், கடவுளுக்குச் சுயநலம் கிடையாது.

விவேகானந்தர்

No comments:

Post a Comment