Monday 9 July 2012

கோயில்களில் தரிசனம் செய்யும் போது செய்யக்கூடாதவை எவை தெரியுமா.?

  • புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது
  • முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது
  • பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது
  • பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது
  • கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது
  • எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது
  • தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது
  • மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது
  • சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது
  • வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது
  • பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
  • இரவில் துணி துவைக்கக் கூடாது
  • குப்பையை வெளியே கொட்டக் கூடாது
  • மரத்தில் நிழலில் தங்கக் கூடாது
  • ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது
  • அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது
  • ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது

  1. ஆயுள்
  2. பொருள்
  3. வீட்டுத் தகராறு
  4. மந்திரம்
  5. உடலுறவு
  6. மருந்து
  7. வருமானம்
  8. தானம்
  9. அவமானம்

  • இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது
  • சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது
  • தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது
  • இடது கையினால் தண்ணீர் அருந்தக்கூடாது.

No comments:

Post a Comment