Tuesday 24 July 2012

கோபிக்கும் தகுதி உள்ளதா..???

* சுவரில் எறியும் பந்து மீண்டும் நம்மிடமே திரும்பிவிடும். அதுபோல, கோபத்தால் பிறரைத் தாக்கினாலும் மீண்டும் வந்து நம்மைத் தாக்கும்.

*உங்களது ஆசைகள் நிறைவேறத் தடையாக இருப்பவர்கள், நம்மை விடக் கீழ்ப்பட்டவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.

* நிறைவேறாத ஆசை என்பது கோபம், வருத்தம் ஆகிய இருவிதங்களில் வெளிப்படுகிறது. இதில் வருத்தத்தை விட, கோபத்தால் நமக்கும் பிறருக்கும் பெரிய அளவில் துன்பம் உண்டாகிறது.

* யாரையும் கோபிக்கும் தகுதியோ உரிமையோ நமக்கு இல்லை என்பதை நினைவில் வையுங்கள். நாமும் பல சந்தர்ப்பங்களில் தவறு செய்திருக்கிறோம் என்ற உண்மை அவரவர் மனதிற்கு நன்றாகத் தெரியும்.

* பலவிதமான தீங்குகளில் தள்ளிவிடும் மோசமான எதிரி கோபம். அது நம்மை அண்டாதபடி விழிப்புடன் இருப்பது அவசியம்.

* கோபம் எதிராளியை மாற்றுவதில்லை. மாறாக இருவருக்கும் இடையே வெறுப்பை உண்டாக்கி பகையை வளர்ப்பது தான் அதன் பலன்.

-காஞ்சி பெரியவர்

No comments:

Post a Comment