Monday 30 July 2012

விவேகானந்தர் » தைரியத்துடன் செயலாற்றுங்கள்


*கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். 

* ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய சுமை முழுவதும் தங்கள் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணி செயலாற்றுங்கள். 

* வேதாந்தம் கூறும் தர்மநெறி முறைகளை வீட்டுக்கு வீடு எடுத்துக் கூறுங்கள். ஒவ்வொருவரிடமும் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணர வழிகாட்டுங்கள்.

* கொழுந்து விட்டெரியும் ஆர்வத்தை நாலாபுறங்களிலும் பரவ விடுங்கள். பரபரப்புடன் பணியில் ஈடுபடுங்கள். எப்போதும் சுயநலம் அற்றவர்களாக இருங்கள்.

* நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு அஞ்சாதீர்கள். எழுந்து நின்று துணிவுடன் நடை போடுங்கள்.

* தூய்மையுள்ளவராக நீங்கள் இருந்தால், தூய்மை இல்லாததைப் பார்க்க முடியாது. உண்மையில் உள்ளே இருப்பது தான் வெளியிலேயும் தெரிகிறது.
» விவேகானந்தர்

No comments:

Post a Comment