Friday 1 June 2012

மகாபாரதத்தில் சகோதரர்களை உடன் அழைத்து செல்ல யட்சன் தர்மரிடம் கேட்ட கேள்விகள்

மகாபாரதத்தில் சகோதரர்களை உடன் அழைத்து செல்ல யட்சன் தர்மரிடம் கேட்டகேள்விகள் : 

1. புல்லை விட வேகமாக வளரும்?
2. எது மனிதனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய லாபம்?
3. மனிதனால் வெல்லவே முடியாத பகை எது?
4. யார் சந்தோசமான மனிதன்?
5. எது ஆச்சரியம்? 





பதில்கள் :


1. புல்லை விட வேகமாக வளரும்?
கவலை.

2. எது மனிதனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய லாபம்?
நோயில்லாத உடல்.

3. மனிதனால் வெல்லவே முடியாத பகை எது?
கோபம்.

4. யார் சந்தோசமான மனிதன்?
கடன் இல்லாதவன், பிழைப்புக்காக வேறு நாட்டுக்குப் போகாதவன், தன் வீட்டில் சமைத்த உணவை உண்ணும் பேறு பெற்றவன், அவனே சந்தோஷமானவன்!

5. எது ஆச்சரியம்? 
ஒவ்வொரு நாளும் பிறர் இறப்பதை பார்த்தும் தான் மட்டும் சாஸ்வதம் என்று மனிதர்கள் நினைப்பது.

(மகாபாரதத்தில் யட்சன் கேள்விக்கு தர்மர் இந்த பதில்களை சொல்லி இறந்த சகோதரர்களை மீட்டு சென்றார்)

No comments:

Post a Comment