Thursday 28 June 2012

வீட்டில் இருக்கும் பொருட்களாலும் புற்றுநோய் வருமாம்..!!!


புற்றுநோய் வருவதற்கு பெரும்காரணமாக புகைபிடித்தல், சுற்றுச்சூழல், அஜினோமோட்டோ மற்றும் பல, என நினைக்கின்றனர். ஆனால் புற்றுநோயானது, அதனால் மட்டும் வருவதில்லை. வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் சில பொருட்களாலும் வருகிறது. அத்தகைய பொருட்களில் புற்றுநோயை உருவாக்கும் பொருளான கார்சினோஜென் இருக்கிறது. இதனை தினமும் வீட்டில் பயன்படுத்துவதாலே வீட்டில் உள்ளோருக்கு பெரும்பாலும் புற்றுநோய் வருகிறது. அப்படி என்னென்ன பொருட்களால் 

புற்றுநோய் வருகிறது என்று படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்...

1. பிளாஸ்டிக் பொருட்கள் : வீட்டில் உணவுப் பொருட்களை வைப்பதற்காக இதுவரை சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தி இருந்தோம். ஆனால் இப்போது அந்த நிலை மாறி, நிறைய வீட்டில் பிளாஸ்டிக்கால் ஆன வண்ண வண்ண பாத்திரங்களை பயன்படுத்துகிறோம். அதுலும் மைக்ரோ ஓவனில் சமைக்க எப்போதும் பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்துவதால், சூடேற்றும் போது பிளாஸ்டிக் பாத்திரத்தில் உள்ள நச்சுப் பொருளான 'கார்சினோஜென்' சமைக்கும் உணவில் கலந்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

2. மினரல் வாட்டர் பாட்டில் : இப்போது அனைவரும் மினரல் வாட்டரையே குடிக்கின்றனர். அத்தகைய மினரல் வாட்டரை பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து குடிப்பதால் புற்றுநோயானது வருகிறது. உலக சுகாதார கணக்கெடுப்பின் படி, மினரல் வாட்டரானது பொதுவாக பிளாஸ்டிக் பாட்டிலிலேயே வருகிறது. அவ்வாறு தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்து குடிப்பது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறுகின்றனர். எல்லா பிளாஸ்டிக் பாட்டிலிலும் தரம் குறைந்த பிளாஸ்டிக்கை உபயோகிப்பார்கள். அந்த பிளாஸ்டிக்கில் புற்றுநோயை உருவாக்கும் பொருளான கார்சினோஜென் இருக்கிறது. ஆகவே அவை குடிக்கும் நீரில் கலந்து புற்று நோயை உண்டு பண்ணுகிறது.

3. ரூம் ஸ்ப்ரே : வீட்டில் அனைத்து கதவுகளையும், ஜன்னல்களையும் அடைத்து விட்டு நறுமணத்திற்காக ரூம் ஸ்ப்ரே அடிக்கிறோம். அந்த ரூம் ஸ்ப்ரேயில் ஃபார்மால்டிஹைடு மற்றும் நாப்தலீன் போன்ற கெமிக்கல்கள் இருக்கிறது. இவை புற்று நோயை உண்டாக்க கூடியவை. அவ்வாறு அனைத்தை கதவுகளையும் மூடி விட்டு அடிக்கும் போது அந்த நறுமணத்தை சுவாசிக்கிறோம். இதனால் எளிதாக புற்றுநோயானது உடலுக்கு வரும். ஆகவே எப்போது செயற்கையான ரூம் ஸ்ப்ரே அடிப்பதை தவிர்த்து, இயற்கையான முறையில் தாயாரிக்கும் ரூம் ஸ்ப்ரேயை நன்கு விசாரித்து வாங்கி பயன்படுத்துங்கள்.

4. வாசனை மெழுகுவர்த்தி : வாசனை மெழுகுவர்த்திகளால் கூட புற்று நோய்கள் வரும். அந்த மெழுகுவர்த்திகள் புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜெனிக் புகையை உருவாக்குகிறது. அப்போது இதனை சுவாசிப்பதால், அவை எந்த நேரத்திலும் புற்றுநோயை உருவாக்கும்.

5. பெயிண்ட் மற்றும் வார்னிஷ் : வீட்டில் அடிக்கும் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் போன்றவற்றில் இருந்து வரும் கெமிக்கல் வாசனையை சுவாசிக்கும் போது சில சமயம் தலைவலி அதிகமாக வரும். ஏனெனில் பெயிண்டில் இருவகைகள் உண்டு. எளிதில் ஆவியாகக்கூடியது மற்றும் எளிதில் ஆவியாகாதது. இவற்றில் தலைவலி மற்றும் அதைவிட கொடூரமான புற்றுநோயை உருவாக்கக்கூடியவை எளிதில் ஆவியாகக்கூடிய பெயிண்ட்களே. ஆகவே இவற்றை அடிப்பதை தவிர்த்து, வீட்டிற்கு எளிதில் ஆவியாகாத பெயிண்ட்களை வாங்கி அடித்தால் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

இத்தகைய சிறுசிறு பொருட்களே புற்றுநோயை உண்டாக்குகிறது. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்த்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

No comments:

Post a Comment