Saturday 15 September 2012

குட்டிக் கதை

நாட்டில் வரி வசூல் செய்ய நேர்மையான ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார் மன்னர். மந்திரியோ,"கவலைப்படாதீர்கள்! இதுவரை இந்த வேலைக்கு யார் யார் மனுச் செய்துள்ளார்கள். அவர்களை எல்லாம் நாளை அரண்மனைக்கு வரச் சொல்லுங்கள். நேர்மையான ஆளை நான் கண்டுபிடிக்கிறேன்'' என்றார். 

எல்லாரும் அரசவைக்கு வந்தனர். ""நீங்கள் எல்லோரும் கைகளையும், கால்களையும் தூக்கி பயிற்சி செய்யுங்கள்'' என்று சொன்னார் மந்திரி. ஒருவரைத் தவிர எல்லோரும் ஆடாமல் அமைதியாக நின்றனர். பயிற்சி செய்த இவர்தான் நேர்மையானவர் என்றார் மந்திரி. 

எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டார் அரசர். ""இவர்கள் எல்லோரையும் நான் இருட்டு அறையின் வழியாக இங்கு வரச் செய்தேன். இருட்டு அறையில் திறந்த சாக்குகளில் நிறைய தங்க நாணயங்கள் வைத்திருந்தேன். பயிற்சி செய்ய மறுத்தவர்களை சோதனை செய்யுங்கள்; நாணயங்கள் கிடைக்கும். பயிற்சி செய்தால் எங்கே மாட்டிக் கொள்வோம் என்றுதான் செய்ய மறுத்தார்கள். பயிற்சி செய்தவர் மட்டும்தான் நேர்மையானவர்'' என்றார் மந்திரி.

No comments:

Post a Comment