Wednesday 5 September 2012

தேளின் இயல்பும்... துறவியின் இயல்பும்

ஒரு மடாலயத்தில் ஜென் துறவிகள் இருவர் வாழ்ந்து வந்தனர். ஒரு முறை மடாயத்தில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு வியர்த்து கொட்டியது. அதனால் அவர்கள் காற்றோட்டமாக நடக்கலாம் என்று முடிவு எடுத்தனர்.

அதனால் அவர்கள் அந்த மடாலயத்தின் அருகில் உள்ள நதிக்கரையோரம் நடந்து சென்றனர். அப்போது தேள் ஒன்று கவனம் தவறி தண்ணீரில் தவறி விழுந்துவிட்டது. அதைப் பார்த்த ஒரு துறவி அதை எடுத்து தரையில் விட்டார். அப்போது அந்த தேன் அவரை கொட்டிவிட்டது.

கொட்டும் போது மறுபடியும் தண்ணீரில் தவறி விழுந்தது. மீண்டும் வெளியே எடுத்துவிட்டார். மறுபடியும் கொட்டி நீரில் விழுந்தது. அவரும் எடுத்து வெளியே விட்டார். இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த மற்றொரு துறவி அவரிடம், "அது தான் கொட்டுகிறதே, ஏன் காப்பாற்றுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "கொட்டவது அதன் இயல்பு, நான் என் இயல்பில் இருக்க விரும்பிகிறேன். அதனால் தான்." என்று கூறினார்.

No comments:

Post a Comment