Monday 3 December 2012

"இது' சேர்ந்தால் "அது' குறையும்

* மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டு கிடக்கிறான். இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.

* மூவாசைகளும் நம்மை மீண்டும் மீண்டும் பிறவிச்சுழலில் தள்ளிவிடுகின்றன.கரையேற நாம் தான் முயற்சியில் இறங்கவேண்டும்.

* வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக முக்கியம்.அதுபோல தெய்வீக வாழ்வில் ஈடுபட நினைப்பவன் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

* எவன் புகழை விரும்பாமல் தன் பணியைச் செய்து வருகிறானோ அவனுடைய புகழை மூவுலகிற்கும் கடவுள் தெரியப்படுத்துவார்.

* வயது தளர்ந்த காலத்தில் மனிதன் படும் துன்பத்தை எண்ணி இளைஞர்கள் தன்னைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்.

* தியானம், பக்தி, தர்மத்தில் ஈடுபாடு, ஒழுக்கம் இவையெல்லாம் நம் மனதில் இருக்குமானால் இருக்கும் இடமே புனிதமாகிவிடும். 

* பணம் ஒருவரிடம் சேரச் சேர சாப்பாடு, தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும்.

வாரியார் 

No comments:

Post a Comment