Sunday 23 December 2012

வீட்டிலும் தவம் செய்யலாம்

* சத்தியத்தைக் கூறுவதுடன், தர்மவழியில் நடக்க வேண்டும். தாய், தந்தை, குரு ஆகியோரைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும்.

* உலகம் முழுவதும் எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். பாலில் நெய்யிருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை.  கண்ணுக்குத் தெரியாததால் பாலில் நெய்யில்லை என்று அர்த்தமில்லை.

* எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது என்னும் பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை.

* தவம் செய்ய காட்டுக்குப் போக வேண்டாம். பட்டினி வேண்டாம். தலைகீழாக நிற்க வேண்டாம். மனைவி மக்களுடன் வாழ்ந்து கொண்டே தவம் செய்யலாம்.

-வாரியார்

No comments:

Post a Comment