Wednesday 19 December 2012

ஏற்றத்தாழ்வு நமக்கு இயற்கை

* தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.. வயது தளர்ந்த காலத்தில் மற்றவர்கள் படும் துன்பத்தைச் சிந்தித்துப் பார்த்து வாழ வேண்டும்.

* சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகிக் கொள்ளுங்கள், ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும் என்பதை உணரவேண்டும்.

* வெயில் அதிகமாக இருந்தால் மழை வரும். அது போல் அநீதி அதிகமானால் தான் மகான்கள் அவதரிப்பார்கள்.

* ஞானிகளின் கோபம் மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்துவிடும், ஆனால், பாமரர்களின் கோபம் பிறவி தீரும் வரை மறையாது. எனவே, கோபத்தை அறவே விடுங்கள்.

* உருவத்தில் மனிதனாகவும், குணத்தில் மிருகமாகவும் இருக்கக்கூடாது, மனிதத் தன்மையில் இருந்து தெய்வத்தன்மை பெற வேண்டும். அது முடியாவிட்டால் மிருகத்தன்மைக்காவது போகாமல் இருக்க வேண்டும்.

* எதிர்ப்பு இருந்தால் தான் உலகம் நம்மை அறியும். அதற்காக வருந்தாதீர்கள். நமக்கு வேண்டாதவரும் வாழவேண்டும் என்பதுதான் நமது பண்பாடு.

- வாரியார் 

No comments:

Post a Comment