Saturday 15 December 2012

மனமிருப்பவன் என்ன செய்வான்?

* ஞானத்தைக் கொடுப்பவர் குருவைத் தவிர வேறு யாருமில்லை. நம் வாழ்க்கையில் சிறந்த ஒரு ஆசிரியர் கிடைத்துவிட்டால் நிச்சயம் பிறவிக்கடலைத் தாண்டிவிடலாம்.

* நாம் பிறவாத இடமோ, பேசாத மொழியோ, தோன்றாத குலமோ கிடையாது. எனவே எல்லா நாடும் நமது நாடே, எல்லா மக்களும் நமது சகோதரர் என்று கருதி சாந்தமாகவும், அன்பாகவும் வாழ வேண்டும்.

* கிரகம் என்றால் வீடு அல்லது இருப்பிடம். "வி' என்றால் மேன்மை. மேன்மையான இருப்பிடம் விக்ரகம். இறைவனது திருவருள் சிறப்பாக விளங்கி தோன்றும் உயர்ந்த இடம் விக்ரகம்.

* விலங்குகளிலிருந்து மனிதன் உயர்ந்து காட்சி அளிப்பது தெய்வ உணர்ச்சி ஒன்றினால் தான். "மனித வாழ்க்கைக்கு கடவுள் வணக்கம் தேவையா? நாங்கள் கடவுளை வணங்காமல் வாழவில்லையா?' என்று சிலர் கேட்கிறார்கள். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான், மனம் உள்ளவன் இறைவனை வணங்குவான்.

வாரியார் 

No comments:

Post a Comment