Monday 17 December 2012

உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி

* கண்ணுக்கு தெரிந்த இந்த உலகத்துக்கு சேவை செய்வதோடு, கண்ணுக்குக் காணாத கடவுளுக்கும் சேவை செய்ய வேண்டும்.

* மாவட்டங்களுக்கு இடையே எல்லைக்கல் இருப்பது போன்று மனிதனுக்கும் விலங்குக்கும் இடையில் உள்ள எல்லைக்கல் தான் "கடவுள் நினைவு'. கடவுள் உணர்வு இல்லையென்றால் அவன் பெரிய அறிஞனாக இருந்தாலும் விலங்காகவே கருதப்படுவான்.

* இறைவனை எஜமானாகக் கருதி, சேவை செய்வதில் அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.

* பணம், பதவி, குலம், பருமன், உயரம் இவை மனிதனை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதில்லை, அறிவு தான் கொண்டு செல்கிறது.

* நாம் எந்த பாவத்தை செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது என்னும் பாவத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது. 

* சத்தியம் என்ற தாய், ஞானம் என்ற தந்தை, தருமம் என்ற சகோதரன், கருணை என்ற நண்பன், சாந்தி என்ற மனைவி, பொறுமை என்ற புதல்வன் இவர்களே நமக்கு உகந்த உறவினர்கள் ஆவர்.

-வாரியார் 

No comments:

Post a Comment