Saturday 1 December 2012

நல்ல நூல்களைப் படியுங்கள்

* குடும்பத்தினர் ஒன்றுகூடி காலையிலும், மாலையிலும் கடவுளை வழிபட வேண்டியது அவசியம். 

* பிழைகளில் எல்லாம் தலையாய பிழை, அறிவு தரும் நூல்களைப் படிக்காமல் காலத்தை வீணாக்குவதே.

* ஒருவன் எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும், பக்தி இல்லாவிட்டால், விலங்கு நிலைக்கு தாழ்வான்.

* கடவுளை எஜமானராகப் பாவித்து, முகம் சுளிக்காமல் சேவை செய்வதில் ராமபக்தனான அனுமனை, உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* உண்மையை யாரும் மறைப்பது கூடாது. உண்மை அளவில்லாத நன்மையைத் தரும்.

* எந்த பாவத்தைச் செய்தாலும் மனிதனுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால், நன்றி மறந்த பாவத்தை தெய்வம் கூட மன்னிப்பதில்லை. 

* வியாதி தீர மருந்து உண்ணும்போது பத்தியம் இருப்பர். அதுபோல, தெய்வீக வாழ்விற்கு ஒழுக்கம் என்னும் பத்தியம் அவசியம். 

* வயலில் இட்டவிதை பலமடங்கு பெருகுவது போல, மனிதன் செய்த நல்வினை, தீவினையின் பயன்கள் ஆயிரம் ஆயிரமாகப் பெருகிவரும்.

» வாரியார்

No comments:

Post a Comment