Tuesday 11 December 2012

ஆனந்த தீபம் ஏற்றுவோம்

* தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஜூவாலை மேல்நோக்கி எழுவது போல் உயர்ந்த குணத்தைக் கீழ்ப்படுத்த, யாராலும் முடியாது.

* வியாதி தீர பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல் தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* ஒளி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு சொர்க்கமும், இருள் மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு நரகமும் கிடைக்கிறது.ஒளிக்காக திருக்கார்த்திகையில் விளக்கேற்றப்படுகிறது.

* நான் என்ற எண்ணம் விலகினால் துன்பம் முழுவதும் நீங்கப் பெற்று அருட்பெருஞ் ஜோதி தரிசனம் உண்டாகும். ஆனந்தம் உதிக்கும், என்றும் அழியா இன்பம் தோன்றும். 

* இறைவனுடைய கருணையைப் பெற நினைப்பவர்கள் பிற உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும்.

வாரியார்

No comments:

Post a Comment