Monday 13 August 2012

வல்லாரையின் மகிமை

•வல்லாரை இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசி வர எளிதில் ஆறும்.

•வல்லாரை இலைகளை தொடர்ந்து தின்று வர உடல் உஷ்ணம் நீங்கும்; உடல் வலிமை பெறும்.

•கைப்பிடி வல்லாரை இலையுடன் சம அளவு மணத்தக்காளிக் கீரை சேர்த்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வர இரண்டே வாரத்தில் ரத்த சோகை நோய் தீரும்.

•வல்லாரைப் பொடி (10 கிராம்), அதிமதுரத்தூள் (5 கிராம்) இரண்டையும் கலந்து இரவு தூங்கப்போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் தீரும்.

•வல்லாரையை பால்விட்டு அரைத்து காலை, மாலை சாப்பிட இளமை பெருகும்.

•சம அளவு வல்லாரை, துளசி இலையை எடுத்து பத்து மிளகு சேர்த்து அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி காய வைத்து எடுக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்ட நேரத்தில் ஒரு நாள் மூன்று வேளை இரண்டு உருண்டைகள் வீதம் தின்று வெந்நீர் குடிக்க காய்ச்சல் மாறிவிடும்.

•வல்லாரை இலைச் சாறுடன் தேன் கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்தால் ஞாபகசக்தி, சுறுசுறுப்பு கூடும்.

•வல்லாரை இலைப்பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட உடல் இயக்கம் சிறப்பாகும்.

•வல்லாரை இலைகளை துவையலாக அரைத்துச் சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்; நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

•வல்லாரைக் கீரையை குழம்பாக, கூட்டாகச் செய்து சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாகும்; ரத்த விருத்தி ஏற்படும்;கண் எரிச்சல் தீரும்.

No comments:

Post a Comment