Monday 27 August 2012

புதினாவின் பயன்கள்..


*  புதினாக்கீரை வாசனை மிகுந்த சத்துக்கள் நிறைந்த கீரையும் ஆகும்.

*  உயிர்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து ஏராளமாக புதினாக் கீரையில் இருக்கிறது.

*புதினாக் கீரையைச் சட்னி செய்து சாப்பிட்டால்தான் முழுப்பயனையும் பெறலாம்.

*  ரத்தத்தைச் சுத்தி செய்வதில் மிகச் சக்தி வாய்ந்த கீரை இது.

*  ருசியை ஏற்படுத்திப் பசியை அதிகமாக்கும். வாந்தி பேதி ஆகியவற்றை உடனே நிறுத்தும். அக்னி மந்தத்தைக் குணமாக்கும்.

*  வயிற்றுக்கும் குடலுக்கும் வலிமை தருவதில் நிகரற்றத் தன்மை வாய்ந்த கீரை இது.

*  புதினாக் கீரையில் இருந்து மென்தால் எனும் ஒருவிதச் சத்தை எடுக்கிறார்கள். இந்த உப்பு பல்வேறு மருத்துவ உபயோகங்களுக்குப் பயன்படுகிறது.

No comments:

Post a Comment