Wednesday 1 August 2012

பொறுமைக்கு பலன் நிச்சயம்

சிந்தனைகள் » மகாத்மா காந்தி

* கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் உண்டு என ஏற்றுக்கொண்டால் நன்மை நமக்குத் தான். 

* பிரார்த்தனை என்பது மனிதனை கடவுளுடன் சேர்க்கும் பாலமாகவும், பேசுவதற்குரிய வாய்ப்பாகவும் இருக்கிறது.

* உண்மையான பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்க்க மறுப்பதில்லை. பெரிய செயலையும் எளிதாக செய்யும் ஆற்றலை கடவுளிடம் இருந்து ஒருவரால் பெற முடியும். 

* மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனையில் ஈடுபட பொறுமை அவசியம். ஆழமான பக்தி கொண்டவர்கள் எளிதாக கடவுள் சிந்தனையில் ஈடுபடுவர். மற்றவர்கள் பொறுமை பெற சில காலம் ஆனாலும், முயற்சியை கைவிடக் கூடாது. பொறுமையுடன் செய்யும் முயற்சிக்கு பலன் நிச்சயம்.

* பிறர் மீது அன்பு காட்டுபவர், கடவுளுக்கு பிடித்தமானவர். அன்பு நெஞ்சம் கொண்டவர் கடவுளின் அருளை எளிதாகப் பெற்றுவிடுவார். 

»  காந்திஜி 

No comments:

Post a Comment