Monday 20 August 2012

பூ...பூ...வாழைப்பூ

* வாழைப்பூ சற்று துவர்ப்பாயிருக்கும். அதுவே உடலுக்கு ஏற்றது. துவர்ப்பு பிடிக்காதவர்கள் வாழைப்பூவை பொடியாக அரிந்து சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவும் நீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் துவர்ப்பு நீராக இறங்கிவிடும்.

* வாழைப்பூவை நறுக்கிச் சாறு எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் ரத்த மூலம் போக்கும். கை,கால் எரிச்சல் நீங்கும்.

* வாழைப்பூ கறி பித்தம், வாதம், உடலில் ரத்தக் குறைவு, வயிற்றில் பூச்சி முதலிய வியாதிகளுக்கு சஞ்சீவி போன்றது.

* வாழைப்பூவிலுள்ள காளானையும், கண்ணாடித் தோலையும் அகற்றிவிட்டு அரிந்து பருப்புச் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது வயிற்றுக் கோளாறைப் போக்கும்.

* அரைத்த உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்புடன் கலந்து வடையாகச் செய்து சாப்பிட்டால் சுவைக்கு சுவை, உடலுக்கு ஏற்றது.

No comments:

Post a Comment