Saturday 11 August 2012

பாட்டி வைத்தியம்

•மாதுளம் பழச்சாற்றுடன் தேன் கலந்து பருகி வந்தால் இதய நோயின்றி நலமுடன் வாழலாம்.

பப்பாளி பழத்தை காலை உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனுடன் தேன், உலர்ந்த பழங்களைச் சேர்த்து சாப்பிட்டு, சூடாக ஒரு கப் பால் அருந்தினால் இளமையோடு திகழலாம்.

திராட்சைப்பழச்சாறு அருந்தி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு குறைந்துவிடும்.

சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். அதனை வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்; உடல் குளிர்ச்சியடையும்.
 
தேனீக்கள் கொட்டினால் பற்பசையை எடுத்து அந்த இடத்தில் தடவ வேண்டும். சில நொடிகளில் வலி பறந்துவிடும். பற்பசையில் உள்ள வேதிப்பொருளானது விரைவாக செயல்பட்டு வலியைக் குறைத்து விடும்.

வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேக வைத்து மோரில் கரைத்து உப்புப்போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்று வலி இருக்காது.

ஜலதோஷம் வருவதற்கான அறிகுறி தென்பட்டால் அரை நாளாவது படுக்கையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. சூழ்நிலையின் சீதோஷ்ண பாதிப்பினால் ஜலதோஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குங்குமப்பூவுடன் சம அளவில் தேன் கலந்து மூன்று நாள்களுக்கு தினசரி இரண்டு வேளை வீதம் உட்கொண்டு வர குடல்புண் குணமாகும்.

No comments:

Post a Comment