Monday 13 August 2012

ஆ அப்படியா!

மூட்டு வலியா?: மழையும் குளிரும் சேர்ந்துவிட்டால் போதும். பலருக்கு மூட்டுவலி வந்துவிடும். இந்த மூட்டுவலிக்கு சிறிது வினிகரை மூட்டுகளின் மீது தேய்த்து வந்தால், வலி மறைந்துவிடும்.

மூக்கடைப்பா?: மூக்கடைப்புக்கு மட்டுமல்ல; மூக்கு சம்பந்தப்பட்ட பல தொல்லைகளுக்கு மருந்தாக, கொத்துமல்லி கீரையைத் துவையலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர தொல்லைகள் சீர்படும்.

வாந்தியா?: வாந்தியும் குமட்டலும் உண்டாகிறதா? வெங்காயத்தைத் தோல் உரித்து சிறிது நேரம் முகர வேண்டும். அதையே வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கினால் வாந்தி வருவது "கப்' என்று நின்றுவிடும்.

No comments:

Post a Comment