Monday 15 October 2012

மன்னிக்கும் பக்குவம்

* அணுவளவு கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரணநிலையை அடைந்து விட்டால் அவனே கடவுள்.

* நம்முடைய மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் அப்படியே அழிந்து போவதில்லை. அவை விதைகளாக தங்கி விடுகின்றன.

* தெய்வத்தின் தலையிலே வாழ்க்கைச் சுமையைப் போட்டு விட்டு கவலை, பயம் என்னும் நாய்களுக்கு உள்ளத்தை இரையாக்காமல் வாழுங்கள்.

* தான் ஒரு குற்றம் செய்தால் அதைச் சுண்டைக்காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால் அதைப் பூசணிக்காய் போலவும் மக்கள் நினைக்கிறார்கள். 

* தான் செய்த குற்றத்தை மறைப்பதும், தன் மீது குற்றமில்லை என பொய்க் காரணம் சொல்ல முயற்சிப்பதும் மூடனின் செயலாகும்.

* குற்றவாளிகளை சீர்திருத்தி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்படச் செய்ய வேண்டும். அவர்களை மன்னிக்கும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பாரதியார்

No comments:

Post a Comment