Saturday 14 April 2012

தமிழ் தாய் வாழ்த்து


நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!

அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! 
தமிழணங்கே!

நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! 
வாழ்த்துதுமே! 
வாழ்த்துதுமே

-"மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை

No comments:

Post a Comment